சேர்க்கை அறிவிப்பு - சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறை (பொன்னம்மாப்பேட்டை அருகில்) ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
சேலம்
மாவட்டம் வாய்க்கால்பட்டறை
(பொன்னம்மாப்பேட்டை அருகில்) பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 2017-18 ம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர் சேர்க்கை
தற்போது நடைபெற்று வருகிறது
இந்த
பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டியதன் அவசியம்.
பள்ளியின்
சிறப்புகள்:
1. கணினி வழி கற்பித்தல்:
சுழற்சி முறையில் முதல் வகுப்பு முதல்
அனைத்து மாணவர்களுக்கும் M.S.Paint,
M.S.Word, M.S.Excel, English, Tamil Typing ஆகியன கற்றுத்தரப்படுகின்றன.
2. Cine
projector வழி
கற்பித்தல்:
மாணவர்கள் எளிதில் புரிந்தது கொள்ளும்
வகையில் அனைத்துப் பாடங்களையும் இணையத்திலிருந்து videoக்களாக பதிவிறக்கம் செய்யப்பட்டு பள்ளியில் projector ல் திரையிடப்பட்டு
கற்பிக்கப்படுகிறது.
3. Indoor
games, யோகா:
செஸ் (Chess), கேரம் (Carrom) போன்ற உள்விளையாட்டுகள், யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் பயிற்சி பெற்ற இப்பள்ளி
ஆசிரியர்களால் கற்றுத்தரப்படுகின்றன. மேலும் இத்தகைய பயிற்சிகள் மாணவர்கள் மனதை
ஒருநிலைப்படுத்தி கற்க உதவுகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பள்ளி மாணவ மாணவியர் ஒன்றிய வட்டார அளவிலான செஸ் போட்டிகளில்
கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளனர்.
4. கலாச்சார விழாக்கள்:
இப்பள்ளியில் ஆண்டு விழா, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, கல்வி வளர்ச்சி நாள் போன்ற விழாக்கள் நடத்தப்பட்டு
மாணவர்களின் (தமிழ் மற்றும் ஆங்கில) பேச்சு, நாடகம், நடனம், பாடல் ஆகிய திறன்களை மேம்படுத்தப்படுகின்றன.
5. கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்வுகள்:
இப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி, உணவுத்திருவிழா, Design for Change (DFC) என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கை கழுவும் தினம் போன்ற சுகாதாரம்
சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தம்பட்டு
மாணவர்கள் தரம் மேம்படுத்தப்படுகின்றன.
5. தொழில்நுட்ப மேம்பாட்டு:
நவீன
அறிவியல், சூரிய குடும்பம், கோள்கள், நட்சத்திரங்கள், பிரபஞ்சம் பற்றிய பாடங்களை
கற்பிக்கும்போது
NASA போன்ற.உலகத்தரம் வாய்ந்த
நிறுவனங்கள் வெளியிடக்கூடிய original video க்களை பதிவிறக்கம் செய்து projector ல் திரையிடப்பட்டு
கற்பிக்கப்படுகின்றன.
6. கற்பித்தல் முறைகள்:
1 முதல் 4 வகுப்புகளுக்கு ABL முறையிலும், 5ம் வகுப்பிற்கு SALM முறையிலும் கற்பிக்கப்படுகின்றன. CBSE பள்ளிகள்பின்பற்றுவது போல ம CCE முறையில் தொடர் மற்றும் முழுமையான.மதிப்பீட்டு
முறை மற்றும் முப்பருவ (3 Terms) கல்வி முறை பின்பற்றப்படுகின்றன. ஆங்கில
உச்சரிப்புக்கான Phonotics
முறை DVD க்கள் கொண்டு கற்பிக்கப்படுகிறது.
இப்பள்ளியின்
ஆண்டு விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளை youtube தளத்தில் கீழுள்ள இணைப்பில் சென்று காணலாம்.
இன்றே
உங்கள் பள்ளி வயது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயனடைவீர்.
பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவித்தவை:
சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறை பகுதியை
சேர்ந்த நண்பர்கள் தங்கள் ஊரில் உள்ள வாய்க்கால்பட்டறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின்
சிறப்புகளை விளக்கும் இந்த பதிவை உங்களுக்கு தெரிந்த
வாய்க்கால்பட்டறை
பகுதியை சேர்ந்த Facebook மற்றும் whatsapp group களுக்கு share செய்து நமது ஊர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க
உதவுங்கள். சிறப்பாக செயல்படும் நமது ஊர் அரசுப்பள்ளிக்கு தங்களது மேலான ஆதரவை வழங்குமாறு
கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
இங்ஙனம்
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்.
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி
வாய்க்கால்பட்டறை,
சேலம் 636003.