Friday 9 June 2017

மனிதனுக்கு அடுத்ததாக புதிய உயிரினம் பரிணமிக்க தொடங்கிவிட்டதா?


உலகில் தோன்றிய உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய டார்வின் கொள்கையை ஏற்று கொண்டவர்களும், ஏற்று கொள்ள தகுந்த சான்று இல்லை என்று அதை மறுப்பவர்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு கருத்து காலப்போக்கில் மனித சராசரி உயரம் குறைந்து கொண்டே வருவது. ஆம் நீங்களும் இதை பற்றி யோசித்திருக்கலாம், வரலாற்றில் மிகப் பெரிய ஆதாரங்களும் காணப்படும். டார்வின் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால் ஒரு உயிரினம் பரிமாண வளர்ச்சிப்படி ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு பல மில்லியன் வருடமாக வளர்சிதை மாற்றங்கள் நிகழ்ந்து மற்றொரு நிலையை எட்டும் அல்லது மாறும் அதனடிப்படையில் அது பெற்ற புதிய தகவமைப்பு அதற்கு நன்மை பயக்கும் பட்சத்தில் அது தொடரும், இல்லையேல் அது நீக்கப்படும். இக்கண்ணோட்டத்தில் காண்போமானால் மனித வளர்ச்சி குறைந்து கொண்டே வருகிறது. ஆம் இதுபற்றி பல ஆதாரங்கள் நம் பூமியில் உண்டு. ஆதி மனிதன் மற்றும் நம் முன்னோர்கள் அனைவரும் பத்தில் இருந்து ௧௧,௧௨ (11,12) அடி அல்லது அதற்கு மேற்பட்ட உயரம் உடையவர்கள். அதற்கு ஆதாரமாக பல எலும்புக்கூடுகளும், பல கால் தடங்களும் கிடைத்துள்ளது. மனிதன் பத்து அடிக்கு மேல் உயரமாக முன்பு இருந்துள்ளான் என்பதற்கு இன்றும் சாட்சியாக சவுதி அரேபியாவில் அல் ஊலாவில் உள்ள 'மத்யன் சாலிஹ்' என்ற கிராமத்தை சொல்லலாம். இந்த கிராமத்தில் உள்ள மலை வீடுகள் (படத்தில் காணலாம்) சதாராண மனிதர்களால் வசிப்பதற்கு அது ஏற்றதல்ல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட மலை வீடுகள் என்பது நிரூபிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்புஉயரமாக இருந்த மனிதர்களின் சராசரி உயரம் தற்போது ஏன் குறையப்படுகிறது..! ஒரு வேளை நாம் உயரமாக இருப்பது அதாவது நம் உயரமான உடலை ஏந்தி வாழ்வது கடினமாக இருப்பதால் தான் நம் வளர்ச்சி குறைகிறதோ என்னவோ..! அல்லது நாம் அடுத்த பரிமாணத்திற்கு மாறி கொண்டிருக்கிறோமா..! தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அதன் தாக்கம் நம் உடலில் தெரிகிறது. இந்த அறிவியல் உலகில் பொதுவாக உடலால் செய்யப்படும் வேலையின் அளவு (தசைகளுக்கு கொடுக்கப்படும் கடின வேலை) குறைந்து கொண்டே வருவதால் இந்த மாற்றம் மற்றும் அறிவியல் வளர்ச்சியால் நம் கால சூழ்நிலைகள், உணவு பழக்க வழக்கங்கள், நம் உழைப்பின் திறம், பூமியில் ஏற்படுத்தப்பட்ட மாசு இப்படி பல காரணங்கள் கூறலாம். என்ன தான் ஜீன் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு என்று கூறினாலும் மேலே சொன்ன கருத்தே உண்மை. நீங்கள் வேற்று கிரகவாசிகளின் படத்தை பழைய எகிப்திய கல்வெட்டுகள் மற்றும் இதுவரை பார்த்த கேள்வியுற்ற அனைவரும் கூறுவது ௩ (3) லிருந்து ௪ (4) அடி தான். மேலும் வேற்று கிரகவாசிகள் நம்மை விட அறிவியலில் மேம்பட்டவர்களே இவ்விரண்டுக்கும் உள்ள தொடர்பை தான் நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோமோ அல்லது மற்றொரு சாரர் கருதுவது போல் வேற்று கிரக வாசிகள் அனைவரும் காலப்பயணம் செய்த எதிர்கால மனிதர்கள் என்ற கருத்தை முன் வைத்தாலும் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மனித உயரம் குறைந்து காணப்படலாம். எது எப்படியாயினும் நம்மை சோம்பேறியாக மாற்றும் இயந்திரங்கள் நம் முன்னோர்களின் கம்பீர, பிரமிப்பூட்டும் உயரத்தையும், ஆரோக்கியத்தையும் நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. இது அனுமானமும், உண்மையும் கலந்து உருவாக்கப்பட்ட கருத்தே ஆனால் இது உண்மைாகும் வாய்ப்புகள் அதிகம்.

Tuesday 6 June 2017

கடவுள்களின் மர்மம்! மனிதர்களை அவதானிக்கும் இருண்ட கிரகம்.. வெளிப்பட்ட இரகசியம்!

பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் என்ற பதிவின் மூலம் வேற்றுக் கிரகங்களுக்கும் பூமிக்கும், பூமிவாசிகளுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி நிறைய பதிவுகள் நமது நேதாஜி குழுவில்  பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில் சென்ற பதிவுகளில் வேற்றுக்கிரகத்தவர் ஏன் பூமிக்கு வந்தார்கள்? அவர்களுக்கு தேவைப்பட்டது என்ன? என்பதோடு பல விடயங்களை பற்றி பார்த்திருந்தோம்.
அதனைத் தொடர்ந்து வேற்றுக்கிரகவாசிகளுக்கும், கடவுள்களுக்கும் உள்ள தொடர்பினையும் பற்றி ஆராயலாம்.
இது முற்று முழுதான அறிவியல், விஞ்ஞானம் தொடர்பானதும், ஆய்வாளர்கள் ஆய்வின் மூலம் கூறும் விடயங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது மாத்திரமே. மதக் கோட்பாடுகளையும், நம்பிக்கைகளையும் சுட்டிக்காட்டுவது அல்ல.
இப்போது பூமியில் பல்வேறு கடவுள்கள் காணப்படுகின்றனர், அவர்கள் அனைவருமே ஒரு காலத்தில் மனிதர்களுக்கு ஆணையிட்ட தலைவர்களே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Zecharia Sitchin இது குறித்து பல வருடங்கள் ஆய்வு செய்து ஒரு புத்தகத்தினையும் வெளியிட்டார். அதனை பல ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.
மேலும் சுமேரிய பதிவுகள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் வாயிலாக கிடைக்கப்பெற்ற சான்றுகளுடன் மதங்களையும், வேதங்களையும் இணைத்து ஆராய்ந்தனர்.
இதன் மூலம் ஓர் மிகப்பெரிய இரகசியம் வெளிப்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதாவது ஒட்டு மொத்த உலக மதங்களும் ஒரு இடத்தில் இருந்து ஆரம்பமானதே என்ற உண்மையே அது.
அதன் அடிப்படையில் முதலாவதாக வேதங்களையும், இந்துக் கடவுள்களையும் - வேற்றுக்கிரக சான்றுகளோடும், சுமேரியர்களின் குறிப்புகளோடும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
அதன் மூலம் இந்துக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன், காளி போன்றோர் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்து மனிதர்களுக்கு தலைவர்களாக இருந்தவர்களே என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதில் பிரம்மா - அனு எனவும், விஷ்ணு - என்கி எனவும், சிவன் - என்லின் எனவும் சுமேரியர்கள் வணங்கியதாகவும், அவர்கள் நட்சத்திரத்தில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்புகள் கூறுகின்றன. (ANU, ENKI, ENLIL)
மேலும் வேற்றுக்கிரகம் தொடர்பாக ஆய்வு செய்த போது கிடைத்த சான்றுகளையும், பண்டைய குகை ஓவியங்களையும் ஆய்வு செய்து இந்துக் கடவுள்களுக்கும், நட்சத்திரங்களில் இருந்து வந்ததாக சுமேரியர்கள் கூறும் தலைவர்களுக்கும் இடையேயான ஒற்றுமைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சங்கு போன்ற வடிவத்தை கையில் ஏந்தியிருக்கும் என்கி ENKI எனப்படுகின்றவர், இந்துக்கள் வழிபடும், காத்தல் தொழில் செய்யும் விஷ்ணுவின் உருவ அமைப்புகளுடன் ஒத்துப் போகின்றது.
அதேபோல் அனு (ANU) எனப்படும் ஆதி கால மனிதர்களின் வேற்றுக்கிரக தலைவர் இந்துக்களின் பிரம்மன் எனும் கடவுளுடன் ஒத்துப் போவதாகவும், அனு படைக்கும் தொழிலைச் செய்து வந்ததாகவும் சுமேரியப் பதிவுகள் கூறுகின்றன.
அடுத்தது அழிக்கும் தொழிலைச் செய்ததாக சுமேரியக் குறிப்புகள் கூறும் என்லின் (ENLIL) இந்துக்களின் கடவுள் சிவன், உருத்திரன் என்ற கடவுளுடன் மிகச்சரியாக ஒத்துப்போவதாகவும் கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
அதேபோன்று சிங்கத்துடன் வரும் காளிக்கும், அப்போதைய சுமேரியர்களின் தலைவி இண்ணாவிற்கும் முழு ஒற்றுமைகள் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.
இதே போன்று பல இந்துக் கடவுள்கள், அப்போது வேற்றுக்கிரகங்களில் இருந்து வந்தவர்களினால் மாற்றம் அடைந்து வந்ததே எனவும் கூறப்படுகின்றது.
அதேபோன்று கடவுள்களின் இருப்பிடங்களாக கூறப்படும் அனைத்து மதங்களின் வழிபாட்டுத்தலங்களுக்கும் ஒரே வகை ஒற்றுமையே காணப்பட்டு வருகின்றது.
இவற்றின் மூலம் நட்சத்திரங்களில் இருந்து வந்ததாக கூறப்படும் அல்லது ஒளியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடவுள்களைக் கூறுவதற்கும் வேற்றுக்கிரகவாசிகளின் தொடர்பே காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் வேற்றுக்கிரகவாசிகள் தலைவர்களாக செயற்பட்டு மனிதர்களுக்கு நாகரீகத்தையும், வாழ்க்கை முறையையும் கற்றுக் கொடுத்து வந்துள்ளனர். அதன் பின்னர் காலப்போக்கில் அவர்களையே கடவுள்களாக மனிதர்கள் மாற்றியுள்ளனர் (பின்பற்றியுள்ளனர்) எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மதங்களின் நம்பிக்கையும் சரி, புராணங்களும் சரி அனைத்தும் கூறுவது வானத்தில் இருந்தே தமது கடவுள்கள் வருகைத் தந்ததாகவே.
இது தவிர புராணங்களும், சுமேரியப் பதிவுகளும் ஓர் இருண்ட கிரகம் பூமியை அவதானித்துக் கொண்டே இருக்கும் என கூறியுள்ளன.
வேற்றுக்கிரகங்கள் தொடர்பில் ஆய்வு செய்கின்றவர்கள், அது வேற்றுக் கிரகவாசிகளின் இருப்பிடமாக இருக்கக் கூடும் எனவும் ஓர் கருத்தினை தெரிவித்துள்ளனர்.
குறித்த கிரகம் ஒளியை பிரதிபளிக்காத காரணத்தினால் இலகுவாக தெரிவதில்லை எனவும் கூறியுள்ளனர். இதனை விண்வெளி தொடர்பில் ஆய்வு செய்கின்றவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இது பற்றி விரிவாக பார்ப்பதோடு, இன்னும் பல வகையிலும் வேற்றுக்கிரகங்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பினை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்.

Monday 29 May 2017

Admission Notification of Panchayat Union Primary School, Vaikkalpattarai (Near ponnammapet), Salem - 636003



 சேர்க்கை அறிவிப்பு - சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறை (பொன்னம்மாப்பேட்டை அருகில்) ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி 

சேலம் மாவட்டம்  வாய்க்கால்பட்டறை (பொன்னம்மாப்பேட்டை அருகில்) பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. 

இப்பள்ளியில் 2017-18 ம் ஆண்டுக்கான தமிழ் மற்றும் ஆங்கில வழி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது

இந்த பள்ளியில் உங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டியதன் அவசியம்.
பள்ளியின் சிறப்புகள்:



1. கணினி வழி கற்பித்தல்: 
சுழற்சி முறையில் முதல் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் M.S.Paint, M.S.Word, M.S.Excel, English, Tamil Typing ஆகியன கற்றுத்தரப்படுகின்றன. 




2. Cine projector வழி கற்பித்தல்: 
மாணவர்கள் எளிதில் புரிந்தது கொள்ளும் வகையில் அனைத்துப் பாடங்களையும் இணையத்திலிருந்து videoக்களாக பதிவிறக்கம் செய்யப்பட்டு பள்ளியில் projector ல் திரையிடப்பட்டு கற்பிக்கப்படுகிறது.



3. Indoor games, யோகா: 
செஸ் (Chess), கேரம் (Carrom) போன்ற உள்விளையாட்டுகள், யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் பயிற்சி பெற்ற இப்பள்ளி ஆசிரியர்களால் கற்றுத்தரப்படுகின்றன. மேலும் இத்தகைய பயிற்சிகள் மாணவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி கற்க உதவுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பள்ளி மாணவ மாணவியர் ஒன்றிய வட்டார அளவிலான செஸ் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்றுள்ளனர். 





4. கலாச்சார விழாக்கள்: 
இப்பள்ளியில் ஆண்டு விழா, சுதந்திர தின விழா, குடியரசு தின விழா, கல்வி வளர்ச்சி நாள் போன்ற விழாக்கள் நடத்தப்பட்டு மாணவர்களின் (தமிழ் மற்றும் ஆங்கில) பேச்சு, நாடகம், நடனம், பாடல் ஆகிய திறன்களை மேம்படுத்தப்படுகின்றன. 





5. கண்காட்சி, விழிப்புணர்வு நிகழ்வுகள்: 
இப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி, உணவுத்திருவிழா, Design for Change (DFC) என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கை கழுவும் தினம் போன்ற சுகாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தம்பட்டு மாணவர்கள் தரம் மேம்படுத்தப்படுகின்றன. 




5. தொழில்நுட்ப மேம்பாட்டு: 
நவீன அறிவியல், சூரிய குடும்பம், கோள்கள், நட்சத்திரங்கள், பிரபஞ்சம் பற்றிய பாடங்களை கற்பிக்கும்போது 
NASA போன்ற.உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்கள் வெளியிடக்கூடிய original video க்களை பதிவிறக்கம் செய்து  projector ல் திரையிடப்பட்டு கற்பிக்கப்படுகின்றன. 

6. கற்பித்தல் முறைகள்: 
1 முதல் 4 வகுப்புகளுக்கு ABL முறையிலும், 5ம் வகுப்பிற்கு SALM முறையிலும் கற்பிக்கப்படுகின்றன. CBSE பள்ளிகள்பின்பற்றுவது போல ம CCE முறையில் தொடர் மற்றும் முழுமையான.மதிப்பீட்டு முறை மற்றும் முப்பருவ (3 Terms) கல்வி முறை பின்பற்றப்படுகின்றன. ஆங்கில உச்சரிப்புக்கான Phonotics முறை DVD க்கள் கொண்டு கற்பிக்கப்படுகிறது. 

இப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் பல்வேறு நிகழ்வுகளை youtube தளத்தில் கீழுள்ள இணைப்பில் சென்று காணலாம்.

இன்றே உங்கள் பள்ளி வயது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயனடைவீர். 

 பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவித்தவை:

சேலம் மாவட்டம் வாய்க்கால்பட்டறை பகுதியை சேர்ந்த நண்பர்கள் தங்கள் ஊரில் உள்ள வாய்க்கால்பட்டறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் சிறப்புகளை விளக்கும் இந்த  பதிவை உங்களுக்கு தெரிந்த வாய்க்கால்பட்டறை
பகுதியை சேர்ந்த Facebook மற்றும் whatsapp group களுக்கு share செய்து நமது ஊர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க உதவுங்கள். சிறப்பாக செயல்படும் நமது ஊர் அரசுப்பள்ளிக்கு தங்களது மேலான ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

.

நன்றி

இங்ஙனம்
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்.
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி 
வாய்க்கால்பட்டறை
சேலம் 636003.